/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம்
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம்
ADDED : ஜன 12, 2025 10:46 PM

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜபெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர ஆருத்ரா தரிசன நாள். சிவனடியார்களின் சிறப்புமிக்க விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு நடராஜர் சபையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாஆவரன பூஜை, வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இன்ற(13ம் தேதி) நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சோடசோபவுபச்சார தீபாராதனை, திருவம்பாவை பாடப்பட்டு சுவாமி வீதிஉலா நடக்கிறது.
தொடர்ந்து பகல் 11:40 மணிக்கு திருவூடல் வைபவம், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப் படுகிறது.