நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அஷ்டமி சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு அஷ்டமி தின சிறப்பு பூஜை நடந்தது.
உற்சவர் கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி, தரிசனம் செய்தனர்.