sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏ.டி.எம்., கார்டு மாற்றி கொடுத்து பணம் அபேஸ்; மர்ம நபருக்கு வலை

/

ஏ.டி.எம்., கார்டு மாற்றி கொடுத்து பணம் அபேஸ்; மர்ம நபருக்கு வலை

ஏ.டி.எம்., கார்டு மாற்றி கொடுத்து பணம் அபேஸ்; மர்ம நபருக்கு வலை

ஏ.டி.எம்., கார்டு மாற்றி கொடுத்து பணம் அபேஸ்; மர்ம நபருக்கு வலை


ADDED : ஜூலை 30, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஏ.டி.எம்., கார்டினை மாற்றி கொடுத்து ரூ. 15 ஆயிரம் பணத்தை 'அபேஸ்' செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சோமசுந்தரம், 70; இவர், கடந்த 22ம் தேதி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்., மில் பணம் எடுப்பதற்காக காத்திருந்தார்.

அப்போது, அங்கு வந்த 45 வயது மதிக்கதக்க நபரிடம் ஏ.டி.எம்., கார்டு கொடுத்து, ரூ. 500 எடுத்து தருமாறு உதவி கேட்டார். மர்ம நபர் ஏ.டி.எம்., கார்டினை வாங்கி, பின் நம்பர் கேட்டு பதிவிட்டு ரூ.500 பணம் எடுத்து கொடுத்தார்.

அப்போது, மர்ம நபர் வேறு ஒரு ஏ.டி.எம்., கார்டினையும் சோமசுந்திரத்திடம் கொடுத்து அனுப்பினார். மறுநாள் 23ம் தேதி, கடலுார் மாவட்டம், பெரியசித்தாமூர் பகுதி ஏ.டி.எம்.,மில் சோமசுந்திரம் கார்டு பயன்படுத்தி அவரது வங்கியில் இருந்து ரூ. 15 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சோமசுந்தரம், வங்கி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு, போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை 'அபேஸ்' செய்த மர்மநபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us