ADDED : நவ 06, 2024 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி செக்குமேட்டு தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம்,67; இவருக்கு சித்தலுார் கிராமத்தில் உள்ள ஒரு ஏக்கர் 64 செண்ட் நிலத்தில், உளுந்து பயிரிட்டுள்ளார்.
கடந்த 31 ம் தேதி காலை 10 மணிக்கு சித்தலுார் காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜீ,52; உளுந்து பயிரை உழுவு செய்து அழித்துள்ளார்.
இதனையறிந்த வேலாயுதம், அவரது உறவினர் அய்யாக்கண்ணு ஆகியோர் சித்தலுார் சென்று கோவிந்தராஜீயிடம் கேட்டபோது திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
வரஞ்சரம் போலீசார் கோவிந்தராஜீ மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.