sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விருதுகள் பெற்ற கலைஞர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

/

விருதுகள் பெற்ற கலைஞர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

விருதுகள் பெற்ற கலைஞர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

விருதுகள் பெற்ற கலைஞர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்


ADDED : நவ 29, 2024 07:01 AM

Google News

ADDED : நவ 29, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருதுகள் பெற்ற, கள்ளக்குறிச்சி மாவட்ட கைவினை கலைஞர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருதுகள் வழங்கும் விழா சென்னை மாமல்லபுரத்தில் நடந்தது. விழாவில், கைவினை கலைஞர்களுக்கு ரொக்க பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட சேர்ந்த கைவினை கலைஞர்களும் விருதுகள் பெற்றனர்.

அதில் தனி நபர்களுக்கு 4 கிராம் தங்க காசு, 50 ஆயிரம் காசோலை, குழு உற்பத்தி விருதாக 4 கிராம தங்ககாசு, 40 ஆயிரம் காசோலை, மாவட்ட கைத்திறன் விருதாக 3 பேருக்கு தலா 5 கிராம் வெள்ளி பதக்கம் மற்றும் 10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, விருதுகள் பெற்ற கைவினை கலைஞர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த்தை சந்தித்து பரிசுத் தொகை, பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், கைவினை கலைஞர் சக்திவேல் உட்பட கைவினை கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us