/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
/
அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 19, 2025 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை, களமருதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், போலீஸ் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், 'சமத்துவம் காண்போம்; ஒன்றிணைவோம்' விழிப்புணர்வு முகாம் நடந்தது.
டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி மாணவர்களிடம், விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தலைமை ஆசிரியர் சித்தன் வரவேற்றார்.
ஆய்வாளர் தர்மலிங்கம், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சப் இன்ஸ்பெக்டர்கள் வசந்தா, பச்சையப்பன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நசருதுல்லா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

