/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 07, 2024 06:47 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதேகொம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி தலைமையாசிரியர் வசந்தா தலைமை தாங்கினார். அதேகொம் பென்னகம் மாவட்ட வள ஆதார மைய ஒருங்கிணைப்பாளர் ராமு வரவேற்றார். கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிரான வன்முறையை மன்னிக்க கூடாது. பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாக இயக்குனர்கள் மீனாட்சி, அண்ணாதுரை, தனலட்சுமி, கோமதி, சாந்தி, கவிதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோனிகா ஆகயோர் வாழ்த்தி பேசினர்.
பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கவிதா நன்றி கூறினார்.