தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : பிப் 05, 2024 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 03:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கனியாமூர் சக்தி மெட்ரிக் மற்றும் இ.சி.ஆர்., சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி நிறுவனர் பார்வதியம்மாள் தலைமை தாங்கினார்.

தாளாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் சாந்தி ரவிக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றபட்டிமன்ற பேச்சாளர் டாக்டர் பர்வீன் சுல்தானா பேசுகையில், 'எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட அடித்தளமாக இருப்பது பள்ளிக்கல்வி. நீங்கள் எந்த வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாலும், எந்த துறையில் சாதிக்க வேண்டுமென்றாலும் பள்ளி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

இதுதான் உங்களது அடித்தளம். குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில் பெறும் மதிப்பெண்ணை வைத்து தான், நல்ல துறையை தேர்வு செய்து படிக்க முடியும்' என மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us