/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை
ADDED : ஜன 09, 2024 01:14 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் காலனியில் 19.5 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
சங்கராபுரம் காலனியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 19.5 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, துணைத் தலைவர் ஆஷாபீ, ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தனர்.
உதயசூரியன் எம்.எல்.ஏ., மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜையில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தொழிலதிபர் கதிரவன், பாப்பாத்தி நடராஜன், கமருதீன், ஷாகுல், முருகன், ரவி, ஆசிக், ஹரி, சங்கர், கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரி, பரிதா உட்பட பலர் பங்கேற்றனர்.