sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விபி அகரம் ஊராட்சியில் மேல்நிலை தொட்டிக்கு பூமி பூஜை

/

விபி அகரம் ஊராட்சியில் மேல்நிலை தொட்டிக்கு பூமி பூஜை

விபி அகரம் ஊராட்சியில் மேல்நிலை தொட்டிக்கு பூமி பூஜை

விபி அகரம் ஊராட்சியில் மேல்நிலை தொட்டிக்கு பூமி பூஜை


ADDED : பிப் 15, 2024 11:38 PM

Google News

ADDED : பிப் 15, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபி அகரம் ஊராட்சியில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணியினை ஒன்றிய துணை சேர்மன் துவக்கி வைத்தார்.

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம், விபி அகரம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நீடித்து வந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில், விபி அகரம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பி.டி.ஓ., ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயம் கோம்பையன், ஊராட்சி தலைவர் தென்னரசி பாண்டியன், துணை தலைவர் தனம் பாலகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் குமார், செங்கோடன், நிர்வாகிகள் வசந்தராயன், ஊராட்சி செயலர் குருசாமி, பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us