ADDED : ஜன 19, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த துலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் அன்பு,19; இவர் நேற்று முன்தினம் மாலை 7.30 மணிக்கு தனது பைக்கில் ரிஷிவந்தியத்திற்கு புறப்பட்டார். வெங்கலம் அருகே சென்றபோது, எதிர் திசையில் வந்த பைக் மோதியது. அதில் படுகாயமடைந்த அன்புவை, அங்கிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அன்று இரவு இறந்தார்.
இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.