ADDED : நவ 27, 2024 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்,; தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நிறுத்திய பைக்கை காணவில்லை என விவசாயி போலீசில் புகார் அளித்துள்ளார்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஆலங்கிரியைச் சேர்ந்த துரைசாமி மகன் சத்யராஜ், 37; விவசாயி.
இவர் கடந்த 23 ம் தேதி தனது பைக்கில் தியாகதுருகம் சென்றார்.
பஸ் நிலைய வளாகத்தில் பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
இது குறித்து சத்யராஜ் புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.