/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு இடங்களில் பைக் திருட்டு : மர்ம நபருக்கு வலை
/
இரு இடங்களில் பைக் திருட்டு : மர்ம நபருக்கு வலை
ADDED : செப் 19, 2024 11:58 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பைக்குகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகினறனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் மதியழகன்,25; கடந்த 16 ம் தேதி இரவு 8 மணிக்கு பொற்படாக்குறிச்சியில் நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:
உளுந்துார்பேட்டை அடுத்த சிக்காடை சேர்ந்தவர் ஏழுமலை,46; இவர் கடந்த மார்ச் 8 ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். இந்நிலையில் வெளியே நிறுத்தி வைத்திருந்த இவரது பைக்கை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.