நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த ஏ.மரூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 48; இவருக்கு சொந்தமாக கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையம் விவசாய நிலத்தில் லட்சுமிகுமார் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 18ம் தேதி சேகருக்கு சொந்தமான பைக்கை லட்சுமிகுமார் விவசாய நிலத்திற்கு எடுத்து சென்றார். வேலையை முடித்து விட்டு திரும்பியபோது, பைக் மாயமாகியது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.