ADDED : பிப் 12, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த எடுத்தவாய்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராசு, 55; விவசாயி. இவர் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு மகரூருக்கு வரும் வழியில், வடபூண்டி பஸ் நிறுத்தத்தில் தனது 'பைக்'கை நிறுத்தி விட்டு துாங்கினார்.
எழுந்து பார்த்த போது, அவரது பைக் காணவில்லை. வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், சித்தலுாரைச் சேர்ந்த துரைசாமி, 38; என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து துரைசாமியை போலீசார் கைது செய்தனர்.