/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பு தகராறு; வாலிபர் கைது
/
இரு தரப்பு தகராறு; வாலிபர் கைது
ADDED : நவ 18, 2024 07:59 PM
சின்னசேலம் ; தொட்டியம் கிராமத்தில் நடந்த தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் தங்கமணி, 33; இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் தொட்டியம் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 41; என்பவரிடம் பணம் கேட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் சுரேஷ் தனது தம்பி ரமேஷ் என்பவருடன் சேர்ந்து தங்கமணியை தாக்கினார். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இது குறித்த புகாரன் பேரில், சுரேஷ், ரமேஷ், தங்கமணி, தர்மசீலன், தமிழ்செல்வன் உட்பட 6 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து சேகர் மகன் சரவணன், 24; என்பவரை கைது செய்தனர்.