ADDED : ஏப் 16, 2026 10:55 PM

அ நிறம் | அளவு
கச்சிராயபாளையம்: ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க., வேட்பாளர் உதயசூரியன் தலைமையில் கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லோக்சபா தொகுதி மறுவரையறை செய்வதற்கான மசோதா தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க., வேட்பாளர் உதயசூரியன் கருப்பு சட்டை அணிந்து தனது வீட்டின் முன்பு கருப்பு கொடியேற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், நகர செயலாளர் ஜெயவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருள், வி.சி., கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பாசறை பாலு, பேரூராட்சி துணைத் தலைவர் தண்டபாணி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
