sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விற்பனையாளரை கண்டித்து ரேஷன் கடை முற்றுகை

/

விற்பனையாளரை கண்டித்து ரேஷன் கடை முற்றுகை

விற்பனையாளரை கண்டித்து ரேஷன் கடை முற்றுகை

விற்பனையாளரை கண்டித்து ரேஷன் கடை முற்றுகை


ADDED : ஜன 28, 2024 06:44 AM

Google News

ADDED : ஜன 28, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : அணைகரைக்கோட்டாலத்தில் ரேஷன் கடைக்கு வராத விற்பனையாளரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைக்கோட்டாலம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. கிராமத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடை மூலமாக வழங்கப்படுகிறது.

அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க விற்பனையாளர் ஏழுமலை நேற்று காலை 9 மணியளவில் வருவதாக தகவல் பரவியது. இதையொட்டி பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் விற்பனையாளர் ஏழுமலை வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து, கடைக்கு முன் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

மேலும், விற்பனையாளர் சரிவர கடைக்கு வருவதில்லை எனவும், பொருட்களை வழங்குவதில் தாமதப்படுத்துவதாகவும் புகார் தெரிவித்தனர். விற்பனையாளர் மற்றும் அதிகாரிகள் யாரும் வராததால் காலை 11 மணியளவில் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.






      Dinamalar
      Follow us