ADDED : ஜூன் 21, 2025 11:39 PM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில், ரத்த கொடையாளர் தின விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, 2024ம் ஆண்டில் ரத்ததானம் செய்த 100 ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக, குருதி கொடையாளர்கள் உறுதிமொழியேற்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பவானி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மாலினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பழமலை, நிலைய மருத்துவ அலுவலர் பொற்செல்வி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் (பொறுப்பு) பிரேமா உட்பட பலர் பங்கேற்றனர்.