sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏமப்பேர் நகராட்சி குளத்தில் படகு சவாரி துவங்கியது

/

ஏமப்பேர் நகராட்சி குளத்தில் படகு சவாரி துவங்கியது

ஏமப்பேர் நகராட்சி குளத்தில் படகு சவாரி துவங்கியது

ஏமப்பேர் நகராட்சி குளத்தில் படகு சவாரி துவங்கியது


ADDED : நவ 03, 2024 11:30 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஏமப்பேர் நகராட்சி குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, படகு சவாரி துவங்கியது.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதி நகராட்சி குளத்தில் தண்ணீர் குறைந்து, படகு சவாரி செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து ஏரியில் தண்ணீர் நிரப்பி படகு சவாரி துவங்கியுள்ளது.

மாவட்டத்தின் தலைநகரமான கள்ளக்குறிச்சியில் மக்களின் பொழுது போக்கிற்காக இருப்பது ஏமப்பேர் படகு சவாரி குளம் மட்டுமே உள்ளது. இங்குள்ள பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர்கள் நீச்சல் குளம், நடைபாதை ஆகியவை மட்டுமே இப்பகுதி மக்களுக்கு பொழுது போக்கு இடமாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த குளத்தில் சில நாட்களாக நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தண்ணீர் இல்லாமல் போனதால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து சில தினங்களுக்கு முன் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது இந்த குளத்தில் நகராட்சி சார்பில் தண்ணீர் நிரப்பி, படகு சவாரியை மீண்டும் துவக்கி உள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் உற்சாகத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us