/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கில் மதுபாட்டில் விற்றவர் கைது
/
பைக்கில் மதுபாட்டில் விற்றவர் கைது
ADDED : அக் 05, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக்கில் மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் பைக்கில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று காலை 8:30 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் பைக்கில் மதுபாட்டில் வைத்து விற்ற கரியப்பா நகரைச் சேர்ந்த மாயகிருஷ்ணன், 38; என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.