sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ் மோதி சிறுவன் பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

/

பஸ் மோதி சிறுவன் பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

பஸ் மோதி சிறுவன் பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

பஸ் மோதி சிறுவன் பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : மார் 02, 2024 06:34 AM

Google News

ADDED : மார் 02, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : தனியார் பஸ் மோதி சிறுவன் இறந்த வழக்கில், டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துார், அண்ணா நகரைச் சேர்ந்தவர் செந்தில் மகன் அரிகிருஷ்ணன்,5; இவர், கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 5:20 மணிக்கு அசகளத்துார் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி - வேப்பூர் நோக்கிச் சென்ற தனியார் பஸ், சிறுவன் அரிகிருஷ்ணன் மீது மோதியது.

படுகாயமடைந்த சிறுவன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், இறந்தார்.

இதுதொடர்பாக பஸ் டிரைவர் ஏ.மரூர் கிராமத்தை சேர்ந்த சத்தியபிரகாஷ்,41; என்பவரை கைது செய்த வரஞ்சரம் போலீசார், அவர் மீது கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்-1ல் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வி ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஹரிஹரசுதன், தனியார் பஸ் டிரைவர் சத்தியபிரகாஷிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us