ADDED : நவ 24, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; சிறுமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன் மகன் நிவின், 6; இவர், நேற்று காலை 10:00 மணியளவில் தனது வீட்டில் உள்ள பேன் சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்தார்.
உடன், அவரது பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே நிவின் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.