/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிராக்டர் மோதி சிறுவர்கள் காயம்
/
டிராக்டர் மோதி சிறுவர்கள் காயம்
ADDED : செப் 01, 2025 11:42 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் அசோக், 23; நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, டிராக்டரை மாரியம்மன் கோவில் தெரு வழியாக அதிவேகமாக ஓட்டிச் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் செல்வராஜ் மகன் சுந்தரவேல், 35; என்பவரது வீட்டு படிக்கட்டின் மீது மோதி ஷட்டர் உடைத்துக் கொண்டு நின்றது.
இதில் வீட்டின் முன் பக்கம் அமர்ந்திருந்த சுந்தரவேல் மகன் குமரன், 8; மற்றொரு சிறுவனான மணிகண்டன் மகன் வெற்றிவேல், 8; மீதும் டிராக்டர் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து சுந்தரவேல் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் டிராக்டர் ஒட்டி விபத்து ஏற்படுத்திய அசோக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.