/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
ADDED : ஜன 16, 2025 05:23 AM
கள்ளக்குறிச்சி : கொங்கராயபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் வையாபுரி மகன் நாராயணசாமி,41. இவர் கடந்த 13ம் தேதி மாலை தனது வீட்டை பூட்டி விட்டு சித்தலுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்த போது, சட்டை பையில் இருந்த 20 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
இது குறித்து நாராயணசாமி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

