sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோவில் உண்டியலை உடைத்து திருடிய சகோதரர்கள் கைது

/

கோவில் உண்டியலை உடைத்து திருடிய சகோதரர்கள் கைது

கோவில் உண்டியலை உடைத்து திருடிய சகோதரர்கள் கைது

கோவில் உண்டியலை உடைத்து திருடிய சகோதரர்கள் கைது


ADDED : ஜன 20, 2025 04:13 AM

Google News

ADDED : ஜன 20, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஊஞ்சலாயம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் சத்தம் கேட்டது. உடன், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிலர் அருகில் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் இருவர் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து, அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை, பொதுமக்கள் பிடித்து வரஞ்சரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஏமத்துாரை சேர்ந்த கலியபெருமாள் மகன்கள் கண்ணன்,28; காளியப்பன்,32; என்பது தெரிந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் உண்டியலில் திருடிய பணம் ரூ.354யை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us