sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ் டயர் வெடித்து விபத்து : பெண்கள் காயம்

/

பஸ் டயர் வெடித்து விபத்து : பெண்கள் காயம்

பஸ் டயர் வெடித்து விபத்து : பெண்கள் காயம்

பஸ் டயர் வெடித்து விபத்து : பெண்கள் காயம்


ADDED : ஜூலை 28, 2025 10:09 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் டயர் வெடித்த விபத்தில், 2 பெண்கள் காயமடைந்தனர்.

விருத்தாச்சலம் தாலுகா, கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயக்குமார், 37; தனியார் பஸ் டிரைவர். இவர், கள்ளக்குறிச்சி - திருக்கோவிலுார் மார்க்கமாக செல்லும் தனியார் பஸ்சினை நேற்று ஓட்டினார். மாலை 4:30 மணிக்கு, 30 பயணிகளுடன் தியாகதுருகத்தில் இருந்து ரிஷிவந்தியம் நோக்கி திருக்கோவிலுார் வழியாக பஸ் சென்றது.

ரிஷிவந்தியம் வனப்பகுதி அருகே சென்ற போது பஸ்சின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில், பஸ்சில் பயணித்த சிறுவங்கூரை சேர்ந்த நடேசன் மனைவி கலியம்மாள், 60; பாசாரை சேர்ந்த சந்திரகுமார் மனைவி தாமரைச்செல்வி, 38; ஆகிய இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us