sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்ட முகாம் 15ம் தேதி துவங்குகிறது: கலெக்டர்

/

கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்ட முகாம் 15ம் தேதி துவங்குகிறது: கலெக்டர்

கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்ட முகாம் 15ம் தேதி துவங்குகிறது: கலெக்டர்

கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்ட முகாம் 15ம் தேதி துவங்குகிறது: கலெக்டர்


ADDED : பிப் 13, 2024 06:10 AM

Google News

ADDED : பிப் 13, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2024ம் ஆண்டிற்கான கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டட முகாம் வரும் 15ம் தேதி துவங்கி ஒரு மாதம் நடக்கிறது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில், கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி திட்டம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் நஞ்சுக்கொடி, ரத்தம் மற்றும் பால் மூலம் நச்சுயிரி வெளியேறும்.

மாசுபட்ட நஞ்சுக்கொடி மற்றும் ரத்தத்தை தொட்டு சுத்தம் செய்வதாலும், பாலை நன்கு காய்ச்சாமல் குடிப்பதாலும் இந்நோய் மனிதர்களுக்கும் பரவுகிறது.

பண்ணையில் சுகாதாரமான பராமரிப்பு முறைகளை பின்பற்றாமல் இருப்பது, கன்று வீச்சு ஏற்பட்ட கன்றுகளை முறையாக அப்புறப்படுத்தாமை ஆகியவை நோய் பரவுவதற்கு காரணமாகின்றன.

எனவே கருச்சிதைவான மாட்டை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். மேலும், கருச்சிதைவு நடந்த பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நோய் காணும் பகுதிகளில் கன்றுகளுக்கு புருசெல்லா நோய் தடுப்பு மருந்து அளிப்பது சிறந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2024 ஆண்டிற்கான கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் வரும் 15ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது.

கால்நடை மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளித்து கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் இத்தடுப்பூசி முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us