/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொது இடத்தில் மது அருந்திய 15 பேர் மீது வழக்கு
/
பொது இடத்தில் மது அருந்திய 15 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 17, 2024 07:42 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெறும் வாகன விபத்து, வழிப்பறி, திருட்டு, வீண்தகராறு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
அப்போது, பொது இடத்தில் மது அருந்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
அதன்படி, கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக, கள்ளக்குறிச்சி மற்றும் கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தலா 4 பேர், கீழ்குப்பம், வரஞ்சரம் மற்றும் சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் தலா 2 பேர், கரியாலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் என மொத்தம் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

