/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒருவரை தாக்கிய4 பேர் மீது வழக்கு
/
ஒருவரை தாக்கிய4 பேர் மீது வழக்கு
ADDED : அக் 05, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே ஒருவரைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் மகன் பிரகாஷ், 25; இவரது உறவினர் ஏழுமலை, 50; இருவருக்கும் இடையே நிலம் பட்டா மாற்றம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏழுமலை அவரது மகன் கார்த்தி, 25; உறவினர்கள் பழனி, 56; ராமர், 45; ஆகியோர் பிரகாஷை திட்டி தாக்கினர்.
இது குறித்த புகாரின் பேரில் ஏழுமலை உட்பட 4 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.