/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுவனைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
சிறுவனைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : மார் 05, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : பாசாரில் சிறுவனைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சபரிவாசன், 15; இவர், கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி இரவு 10:30 மணியளவில் வீட்டின் அருகே இருந்தவர்களிடம், யார் நீங்கள் என கேட்டுள்ளார்.
அப்போது, அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்தழகன், திருஞானசம்பந்தம், அருள்மணி, பரமசிவம் ஆகிய 4 பேரும் சபரிவாசனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

