sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நேரக்கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்த 29 பேர் மீது வழக்கு

/

நேரக்கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்த 29 பேர் மீது வழக்கு

நேரக்கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்த 29 பேர் மீது வழக்கு

நேரக்கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்த 29 பேர் மீது வழக்கு


ADDED : அக் 21, 2025 09:36 PM

Google News

ADDED : அக் 21, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தீபாவளி தினத்தன்று அதிக அளவிலான பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு குறைக்க தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுக்களை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

அதேபோல், தியாகதுருகம் மற்றும் உளுந்துார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் தலா 4 பேர் மீதும், சின்ன சேலம், கச்சிராயபாளையம், கரியாலுார், எலவனாசூர்கோட்டை, வரஞ்சரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் தலா 2 பேர் மீதும், சங்கராபுரம், திருக்கோவிலுார், மணலுார்பேட்டை, திருப்பாலபந்தல், பகண்டை கூட்ரோடு, ரிஷிவந்தியம் மற்றும் வடபொன்பரப்பி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 29 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us