/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு
/
சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு
ADDED : மே 29, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ராஜாஜி,25; இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஏப்., 7ம் தேதி திருமணம் செய்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மகளிர் ஊர்நல அலுவலர் பஞ்சவர்ணம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த ராஜாஜி, அவரது தாய் லட்சுமி, சிறுமியின் தந்தை மாசிமலை, தாய் மீனா ஆகிய 4 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.