ADDED : மே 17, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய, 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருக்கோவிலூர் சப் இன்ஸ்பெக்டர் சிவகாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, ஜி.அரியூர் ஏரிக்கரை, முனீஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
போலீசார் விசாரணையில் அவர்கள், அம்மன் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த சேஷி மகன் மூர்த்தி, 27; அய்யனார் மகன் சின்னராசு, 28; ராமச்சந்திரன் மகன் சர்க்கரை, 45; துரைசாமி மகன் மகாதேவன், 30; தண்டபாணி மகன் ரஞ்சித், 27; என தெரிய வந்தது. இந்த, 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.