/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு
/
சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 03, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த, 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சின்னசேலம் பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர், கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து வைத்தனர். இது குறித்து தகவலறிந்த சின்னசேலம் ஊர் நல அலுவலர் தமிழ்செல்வி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார்.
அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்த துரைமுருகன், அவரது தந்தை ஜெயராமன், தாய் கொய்தி, சிறுமியின் தந்தை ராஜாராம், தாய் ராணி ஆகிய 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

