sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ் ஹாரன் அடித்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு

/

பஸ் ஹாரன் அடித்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு

பஸ் ஹாரன் அடித்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு

பஸ் ஹாரன் அடித்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 28, 2025 02:17 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் அருகே தனியார் மினி பஸ் தொடர்ச்சியாக ஹாரன் அடித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தனியார் மினி பஸ் ஒன்று நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, திருக்கோவிலுாரில் இருந்து தனகனந்தல் சென்று கொண்டிருந்தது. பஸ் டிரைவரான மேலப்பழங்கூரைச் சேர்ந்த நாராயணன் மகன் கார்மேகம், 24; பஸ்சை அதிவேகமாகவும், தொடர்ச்சியாக ஹாரன் அடித்து கொண்டு சென்றார்.

தனகனந்தல் ரேஷன் கடை அருகே நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சரவணன், 40; ஏன் இப்படி தொடர்ச்சியாக ஹாரன் அடித்து கொண்டு வேகமாக செல்கிறாய் என கேட்டார்.

ஆத்திரமடைந்த டிரைவர் கார்மேகம், கண்டக்டர் நெடுமுடையானை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன், 20; பஸ் உரிமையாளர் வசந்தகுமார், 50; உள்ளிட்ட நான்கு பேர், சரவணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சரவணன், மினி பஸ் டிரைவர் கார்மேகத்தை தாக்கி மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us