/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : ஆக 14, 2025 11:30 PM
கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சியில் மனைவியைத் தாக்கிய கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் வினையத்தான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி அனு, 21; இவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தமிழ்ச்செல்வனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால், கடந்த ஒன்றரை ஆண்டாக கணவரை பிரிந்து தியாகதுருகம் புக்குளம் சாலையில் வாடகை வீட்டில் அனு வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று, தன்னுடன் வந்து வாழும்படி தமிழ்ச்செல்வன், தனது மனைவி அனுவுடன் தகராறு செய்தார்.
இது குறித்து அனு அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் தமிழ்ச்செல்வன், மாமியார் விஜயா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.