/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு
/
மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு
ADDED : நவ 24, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மனைவியை துன்புறுத்திய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, ஊனத்துாரையைச் சேர்ந்தவர் அய்யனார் மகள் அமலா, 21; வினைதீர்த்தாபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இருவருக்குமிடையே கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
இதனால் மாணிக்கம் மற்றும் அவரது பெற்றோர்கள், அமலாவை திட்டி துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து அமலா அளித்த புகாரின் பேரில், கணவர் மாணிக்கம், மாமியார் லட்சுமி, மாமனார் வையாபுரி ஆகிய 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.