/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமிகளை கிண்டல் செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு
/
சிறுமிகளை கிண்டல் செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 12, 2025 10:09 PM
கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே சிறுமிகளை கிண்டல் செய்தது தொடர்பாக சிறுவன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிகள் இரண்டு பேர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் பள்ளியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த வேல்முருகன் மகன் பேரரசு,19; ஜெயராமன் மகன் கார்த்திக்ராஜா,19; பழனிவேல் மகன் அரவிந்த்குமார்,20; மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரும், சிறுமிகளை கிண்டல் செய்ததுடன், ஒரு சிறுமியை தள்ளி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில், 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.