/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நில தகராறில் 5 பேர் மீது வழக்கு பதிவு
/
நில தகராறில் 5 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : மே 22, 2025 11:46 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நிலம் சம்மந்தப்பட்ட தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலத்தை சேர்ந்த குப்புசாமி மகன் சுதாகர், 40; இவரது சகோதரர் சேகர்,45; இருவருக்கும் இடையே நிலம் சம்மந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த, 7ம் தேதி காலை 7:30 மணிக்கு இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரையொருவர் திட்டி தாக்கி கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பினரும் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சேகர், அவரது மனைவி செல்வி,40; மற்றும் சுதாகர், அவரது உறவினர்கள் அஜித்குமார்,25; அலமேலு,44; உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.