sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது விற்பனை 6 பேர் மீது வழக்குப் பதிவு

/

மது விற்பனை 6 பேர் மீது வழக்குப் பதிவு

மது விற்பனை 6 பேர் மீது வழக்குப் பதிவு

மது விற்பனை 6 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : பிப் 15, 2024 05:02 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் மது விற்பனை தொடர்பாக ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ரோந்து சென்றனர். மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்பவர்கள், பொது இடத்தில் மது அருந்துபவர்கள் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் கச்சிராயபாளையம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்ற சீராளன் மகன் மனோகரன், சோலைமுத்து மகன் செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து, அவர்களிடமிருந்த தலா 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், கல்வராயன்மலை நாதம்பள்ளி தெற்கு ஓடை அருகே, 400 லிட்., சாராய ஊரல் வைத்திருந்தது தொடர்பாக, ஆண்டி மகன் அண்ணாமலை மீது கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும், பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us