sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கடன் வசூலிப்பில் தகராறு 9 பேர் மீது வழக்குப் பதிவு

/

கடன் வசூலிப்பில் தகராறு 9 பேர் மீது வழக்குப் பதிவு

கடன் வசூலிப்பில் தகராறு 9 பேர் மீது வழக்குப் பதிவு

கடன் வசூலிப்பில் தகராறு 9 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : ஆக 04, 2025 07:03 AM

Google News

ADDED : ஆக 04, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கடனாக கொடுத்த பணத்தை வசூலிக்க சென்ற போது ஏற்பட்ட தகராறில், இரு தரப்பை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் ஆகாஷ்,22; இவரது தாய் நாகம்மா, கடந்த சில மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த நரேஷ் மனைவி ஜனனி என்பவரிடம் ரூ.6 ஆயிரம் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். ஜனனி தரப்பினர் கடந்த 1ம் தேதி நாகம்மா வீட்டிற்கு சென்று பணத்தை கேட்ட போது ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.

இதில், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக ஆகாஷ் அளித்த புகாரின் பேரில், நரேஷ் மனைவி ஜனனி, நரேஷ், பாண்டு, குப்பம்மாள் ஆகிய 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

அதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த நரேஷ் அளித்த புகாரின் பேரில், சக்திவேல் மனைவி நாகம்மா, ஆகாஷ், சஞ்சய், யுவராஜ், கவுசிகன் ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us