/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் நியமனம்
/
மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் நியமனம்
ADDED : மே 13, 2025 11:55 PM

கள்ளக்குறிச்சி : ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சட்டத்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவினை வெளியிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், தியாகதுருகம் சாலையைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் மாவட்டத்தின் மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ., மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான வேலாயுதம், மத்திய அரசு நோட்டரி பப்ளிக்காவும், கள்ளக்குறிச்சி வட்ட சட்ட பணிக்குழு சட்ட ஆலோசகராகவும் உள்ளார். அதேபோல் பா.ஜ., மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான தியாகராஜன், கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க முன்னாள் பொருளாளராக இருந்துள்ளார்.