sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலீஸ் என ஏமாற்றி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

போலீஸ் என ஏமாற்றி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

போலீஸ் என ஏமாற்றி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

போலீஸ் என ஏமாற்றி மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : ஆக 08, 2025 02:37 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீஸ் என கூறி, தங்க செயின் பறித்து சென்ற வழிப்பறி ஆசாமிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயகாந்தன் மனைவி வசந்தா, 72; இவர், கடந்த 6ம் தேதி பகல் 12:00 மணியளவில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், நாங்கள் போலீஸ், பகலில் நகை அணிந்து செல்லக்கூடாது, நகையை கொடுங்கள் பத்திரமாக கவரில் போட்டு தருகிறோம் என கூறினர். தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய வசந்தா, தான் அணிந்திருந்த 36 கிராம் தங்க தாலி செயினை கழற்றி தந்துள்ளார். உடன் மர்ம நபர்கள் நகையை கவரில் போட்டுள்ளனர்.

தொடர்ந்து, மர்ம நபர்கள் ஏற்கனவே கவரில் வைத்திருந்த போலி நகையை வசந்தா வைத்திருந்த பையில் போட்டுவிட்டு, அங்கிருந்து வேகமாக சென்றனர்.

இதனால் சந்தேகமடைந்த வசந்தா, கவரில் இருந்த நகையை பார்த்த போது, போலி நகை என தெரிந்தது.

இதுகுறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து நுாதன முறையில் நகை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us