நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: சித்தலுார் பெரிய நாயகி அம்மன் கோவிலில் நாளை 24ம் தேதி மாசி திருவிழா தேரோட்டம் நடக்கிறது.
இக்கோவிலில் மாசி திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மூலவர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும், சர்வ அலங்காரத்தில் உற்சவர் அம்மன் வீதியுாவும் நடந்தது. இன்று 24ம் தேதி 8ம் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு மயானக் கொள்ளை திருவிழா நடக்கிறது. அதைத் தொடர்ந்து நாளை 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.
தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

