/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பட்டய கணக்காளர் தேர்வு தாட்கோ மூலம் பயிற்சி
/
பட்டய கணக்காளர் தேர்வு தாட்கோ மூலம் பயிற்சி
ADDED : நவ 15, 2024 04:45 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு பட்டய கணக்காளர் -இடைநிலை , நிறுவன செயலாளர், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.