sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சென்னை இன்ஜினியரிடம் உ.பேட்டையில் வழிப்பறி

/

சென்னை இன்ஜினியரிடம் உ.பேட்டையில் வழிப்பறி

சென்னை இன்ஜினியரிடம் உ.பேட்டையில் வழிப்பறி

சென்னை இன்ஜினியரிடம் உ.பேட்டையில் வழிப்பறி


ADDED : மார் 16, 2025 01:22 AM

Google News

ADDED : மார் 16, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை, :நள்ளிரவில் தனியார் நிறுவன பொறியாளரை தாக்கி நகை, மொபைல்போன், லேப்டாப், பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் வினோத், 29; சென்னை, போரூரில் தனியார் நிறுவன பொறியாளர். 12ம் தேதி நண்பரின் திருமணத்திற்கு கோவை சென்றார். பின், நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்து சென்னைக்கு பைக்கில் புறப்பட்டார்.

நேற்று அதிகாலை, 1:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த ஒலையனுார் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, இயற்கை உபாதைக்காக பைக்கை சாலையோரம் நிறுத்தினார்.

அப்போது, அங்கு ஒரே பைக்கில் வந்த நான்கு நபர்கள், வினோத்தை மிரட்டி தாக்கினர். அவரிடம் இருந்த, 1 சவரன் செயின், லேப்டாப், ஐபோன், 2,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்டவற்றை பறித்து தப்பினர்.

அதிர்ச்சியடைந்த அவர், அருகே உள்ள டீக்கடையில் இருந்தவர்களிடம் மொபைல் போன் வாங்கி, உளுந்துார்பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us