sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோவை பெண் வரதட்சணை வழக்கில் கணவர் உட்பட 5 பேருக்கு நிபந்தனை ஜாமின் சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவு

/

கோவை பெண் வரதட்சணை வழக்கில் கணவர் உட்பட 5 பேருக்கு நிபந்தனை ஜாமின் சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவு

கோவை பெண் வரதட்சணை வழக்கில் கணவர் உட்பட 5 பேருக்கு நிபந்தனை ஜாமின் சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவு

கோவை பெண் வரதட்சணை வழக்கில் கணவர் உட்பட 5 பேருக்கு நிபந்தனை ஜாமின் சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவு


ADDED : ஜூன் 09, 2025 11:39 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கோவை பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் கணவர் உட்பட 5 பேருக்கு கடும் நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கி சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்துார் சிவானந்தபுரம் ஜனதா நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகள் கிருத்திகா, 26; கோயம்புத்துார் சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பிரசன்னா. இருவருக்கும் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி ஈரோட்டில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு முன் பிரசன்னாவின் பெற்றோர் கோயம்புத்துார், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா இரண்டரை கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், பிரசன்னா ஐ.டி., நிறுவனத்தில் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறியுள்ளனர்.

இதனால் வரதட்சணையாக 250 சவரன் நகைகள், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு வாங்கித் தரும்படி கேட்டுள்ளனர்.

கிருத்திகாவின் பெற்றோர் 110 சவரன் நகைகள், கிணத்துக்கடவில் வீட்டு மனை வாங்கி வரதட்சணையாக கொடுத்து, ஈரோட்டில் 35 லட்சம் ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான ஒரிரு மாதங்களில் கணவர் பிரசன்னா, மாமனார் மாரிமுத்து, மாமியார் சாந்தி ஆகியோர் கிருத்திகாவிடம் வரதட்சணையாக அவரது பெற்றோரிடம் மேலும் நகை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி கிருத்திகாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பின், கணவர் பிரசன்னா, மாமனார் மாரிமுத்து, மாமியார் சாந்தி, பிரசன்னாவின் சகோதரி புவனேஸ்வரி, அவரது கணவர் லோகநாதன் ஆகியோர் சேர்ந்து கிருத்திகாவை மற்ற நபர்களுடன் தொடர்புபடுத்தி, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கிருத்திகா தனது குழந்தையுடன் ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.

இதுதொடர்பாக கிருத்திகா கோவை காவல் ஆணையரிடம், கடந்த பிப்ரவரி 7ம் தேதியும், கோயம்புத்துார் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த மார்ச் 21ம் தேதியும் புகார் அளித்தார்.

அதன்பேரில், பிரசன்னா, மாரிமுத்து, சாந்தி, புவனேஸ்வரி, லோகநாதன் ஆகிய 5 பேர் மீது கோவை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த பிரசன்னா உட்பட 5 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் கேட்டு மனு செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை, கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர், விசாரணை நிலுவையில் இருப்பதால் முன் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி செந்தில்குமார் அளித்த உத்தரவில், பிரசன்னா உட்பட 5 பேரும், 15 நாட்களுக்குள் கோயம்புத்துார் நீதித்துறை நடுவர் எண்.6 முன், ஒவ்வொருவரும் 10 ஆயிரம் ரூபாய்க்கு தனித் தனியாக பத்திரம் மற்றும் அதே தொகைக்கு 2 ஜாமின்தாரர்களுடன் ஆஜராக வேண்டும்.

மேலும் பிரசன்னா, மாரிமுத்து, லோகநாதன் ஆகியோர் கோயம்புத்துார் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வாரத்திற்கு காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்.

அதேபோல் சாந்தி, புவனேஸ்வரி ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும்.

வழக்கு விசாரணையின் போது சாட்சியங்களை அல்லது சாட்சிகளை சிதைக்க கூடாது, தலைமறைவாகவும் கூடாது, இந்த நிபந்தனைகளை மீறினால் முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us