/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 29, 2025 12:57 AM

கள்ளக்குறிச்சி: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் குழு மற்றும் தனித்திறன் விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர். கல்லுாரி மாணவர்கள் மொத்தம் ரூ. 2.90 லட்சம் பரிசு தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றனர். போட்டிகளில் 53 மாணவர்கள் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டிகளில் அதிக பரிசுகளையும் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கி பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஒருங்கிணைந்த உடற்கல்வி இயக்குனர் சரவணன், கல்லுாரி அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.