sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கியது

/

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கியது

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கியது

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கியது


ADDED : ஆக 29, 2025 02:52 AM

Google News

ADDED : ஆக 29, 2025 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் துவங்கியது. தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதி வரை நடக்கிறது.

இப்போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் நடக்கிறது.

இதில் கூடைபந்து, கபடி, கையுந்து பந்து, கோ-கோ, கால்பந்து, இறகுபந்து, நீச்சல், சிலம்பம், ஹாக்கி, செஸ், பூப்பந்து, எறிபந்து, மேசைபந்து மற்றும் ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

துவக்க விழாவில் டி.ஆர்.ஓ., ஜீவா முன்னிலையில் மலையரசன் எம்.பி., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சுரேஷ்குமார், உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், ஆர்.கே.எஸ்., கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெறுவோருக்கு 3000 ரூபாய், இரண்டாமிடம் 2,000 ரூபாய், மூன்றாமிடத்திற்கு 1,000 ரூபாய் என பரிசுத் தொகை அவர்களது வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். மேலும் முதலிடம் பிடிப்போர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us